சுகமான காதல்..!

ஒற்யையடிப் பாதையிலே
ஒருநாள் சந்தித்தோம்.
மறுமுறை சந்திக்க
விடுமுறையை தேடினேன்.

சிரித்தாய் உனக்குள்
கதைத்தேன் எனக்குள்.
மாதங்கள் ஓடின
மலருன்னை தேடின.

மறுபடியும் எப்போ
சந்தர்ப்பம் கிடைக்கும்
மயிலே உன்னோடு
மனம்விட்டு பழகிட..

வாடியது மனம்
தேடியது உன்னை
தேடாமல் வந்தாய்
தேவதை ஒருநாள்.

குவிந்தது சந்தோசம்
கூவியது மனது.
கேட்டதோ உனக்கும்
காதலையும் சொன்னாய்

ஈழத் தீவில்
எனக்காகாய் பூத்து
எத்தனை இன்பம்
எனக்குள் தந்தாய்.

கொஞ்சிப் பழகி
கெஞ்சித் திரிந்து
மிஞ்சும் வாலிப
சுகங்களை கண்டோம்.

பேராதனையில்….
நுழைவு கிடைக்க
காதலை வளர்க்க
கூடமும் அமைத்தோம்.

கொழும்பு நகரில்
சுற்றித் திரிந்து
பசுமை நினைவுகள்
பகிர்ந்தும் உண்டோம்.

காலித் திடலும்
மாலைப் பொழுதும்
மனதை கவர்ந்து
மங்கை மகிழ..

எட்டுத் திசையும்
என்னவள் முகமாய்
பட்டுத் தெறித்து
பலகதை சொல்ல..

நெஞ்சக் கூட்டில்
நினைவுகள் தாங்கி
விடியும் வரைக்கும்
கற்பனை சேர்க்க..

பொழுதும் விடிய
போய்விடும் நினைவை
கட்டி இழுத்து
எனக்குள் பூட்ட..

விடுவிடு என்றாய்
படபட என்று
பயந்த முகத்தை
பார்த்துச் சிரித்தேன்.

கடுகடுப்புடனே ….
காதில் சொன்னாய்
காதலைப் பற்றி
கொஞ்சும் தமிழில்..

புரிந்தது உனக்கு
புரியாமல் இருந்தது
புதிராக இருந்தது
எனக்குள் வெட்கம்.

போகட்டும் என்று
புறந்தள்ளி விட்டு
பூவே உன்னை
புரட்டிப் பார்க்க..

பொழுதும் விடிய
நினைவுகள் நகர..
கண்களும் சிவந்து
விழித்துக் கொள்ள..

காதலைப் பற்றி..
காதில் சொன்னது.
உண்மை என்று…
உள்ளமும் சொன்னது.

சிரிப்பும் வந்தது.
சிந்தனை சுழன்றது.
என்மனக் கட்டளை
உனக்கும் சொல்ல..

சொன்னேன் ஒருநாள்
சிரித்தாள் பலமுறை
இதுதான் காதல்
இப்படித்தான் இருக்குமென்று.

ஏக்கங்கள் தாக்கின
இரவுகள் நீண்டன..
ஏனோ எனக்குள்
புரியாத போராட்டம்.

இப்படி இருக்க..
ஒருநாள் சொன்னாள்.
தேவதை சொன்னது.
தேனாக இருந்தது.

காதலை வளர்த்தது
இனியும் போதும்.
கற்பனை வானில்
பறந்ததும் போதும்.

சேர்ந்து வாழ்வோம்
இருவரும் ஒன்றாய்
எமக்குள் இனியும்
இடைவெளி வேண்டாம்.

சொன்னதும் எனக்குள்
சுகமாக இருந்தது.
காதலில் வெற்றி
கண்ட மகிழ்ச்சி.

——————–

வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும்
நினைவுகள் …..
என்றும் சுகமானவை..


..நட்புடன் சிவனேஸ்..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=7151

நம்பிக்கை வேண்டும்.

எழுது எழுது என்று..
மனம் பலமுறை தூண்ட
எழுதுகோலை நான் எடுத்து
எழுத ஆரம்பித்து சிலகணங்கள்..

எழுத ஒன்றும் வரவில்லை
ஏனோ எனக்கும் தெரியவில்லை.
சிந்தனைக்குள் வந்து நின்று
மகிழ்விக்கும் சில காட்சிகளோ
ஒத்து வராமல் ஒதுங்கிநிற்க…!

மனம் சொல்ல மறுபடியும்
மனக்கணக்கு நீண்டு நகர்கிறது.
மாயக்கண்ணாடிக்குள் மனிதர்களின்
வாழ்க்கைப் பயணம் தொடர்வதுதான்.

உண்மையை ஒருகணம் எழுதினால்
சில மனங்கள் குழம்பிப்போகும்.
பொய்யை பலமுறை எழுதினால்
பலமனங்கள் மகிழ்ந்து சிரிக்கும்.

எனக்குள்ளே எழுகின்ற சிந்தனைகள்
எடுத்துச்சொல்ல முடியாமல் தவித்தாலும்
ஒருசில வரிகளை மட்டும்
கிறுக்கியது என் எழுதுகோல்.

விரிந்து கிடக்கிறது பாரபட்சம்
இனி விடியுமென்று நினைப்பதும்
அது முடியுமென்று கதைப்பதற்கும்..
உள்ளங்கள் ஊனமாகாமல் இருக்கவேண்டும்.

ஊனப்பட்ட உள்ளங்கள் எடுக்கின்ற…
உருப்படாத சில முடிவுகளால்தான்
உயர்வு தாழ்வுகள் தலைதூக்கும்
உறங்காமல் மனங்களும் மனம்சோரும்.

ஏன் இந்தக் கோலங்கள்
எதற்காக இவ் அவலங்கள்
ஒத்து வராத வேசங்களை
ஒதுக்கி வைத்தால் என்ன…?

சில நொடிப் பொழுதை
எமக்காக நாம் ஒதுக்கி
நம்மன அழுக்குகளை கழுவினால்
மாசற்றுத் திகளாதோ உள்ளம்.

சிந்தித்தால் முடிவு வரும்
நாளைய பொழுதும் நல்லதாய் …
மலர்ந்து மணம் வீசும்
என்ற நம்பிக்கையும் இருந்தால்

ஆழ் கடல் நடுவிலும் …
அலை அடித்துச் சென்றாலும்
திசைமாறாது அசைந்து செல்லும்
வாழ்க்கை எனும் பயணம்.

——————–

வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும்
நினைவுகள் …..
என்றும் சுகமானவை..


..நட்புடன் சிவனேஸ்..

எனக்காக…!

ஆகாய கங்கையில்
நீராடும் மங்கையே..
நினைவுகளை இங்கு
ஏன் விட்டுச் சென்றாய்…?

எட்டாத பழம் என்று
எட்டி எட்டி நின்றபோதும்
ஒட்டி ஒட்டி வந்து
உறவொன்றை வளர்த்தவளே…

புரியாத நிலவொளியே..
புதிர் போடும் புன்னகையே
எதிர் வீட்டு யன்னலிலே
எனக்காக பூத்தவளே..

திரும்பும் திசைகளெல்லாம்
தெரிகிறது உன் முகம்
கண்களால் சிரிக்கின்றாய்
கவிதைகளாய் மலர்கின்றாய்.

ஏக்கங்களை சுமக்கின்றேன்
எனக்குள்ளே தவிக்கின்றேன்.
எதற்காகத் தெரியுமா…?
நீ.. எனக்காக என்பதற்காய்.

…சிவனேஸ்…
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=7096

மாலைப்பொழுதே…!

மனதை மயக்கிடும்
மாலைப் பொழுதே..
மவுசு கொஞ்சம்
அதிகம் உனக்கு.

மாலை என்றதும்
மனதை மயக்குகிறாய்.
மணிக் கணக்காய்
மனங்களை கவர்கிறாய்.

கற்பனைக் குதிரைக்கும்
கடிவாளம் இடுகிறாய்.
காத்து இருப்பதும்
தொடர்கதை என்கிறாய்.

காதலர் மனங்களை
களிப்புற வைக்கிறாய்.
கசக்காமல் இருந்திட
நாளையும் வருகிறாய்.

நம்பிக்கை உடன்தான்
நாடுது உன்னை.
நாயகி நீயென்று
நம்புது மனங்கள்.

காலைச் சூரியனும்
காதலிக்கிறான் உன்னை.
மாலை என்றதும்
அவன் முகமும்
வெட்கத்தால் சிவக்குது.

அந்தி நேரத்தில்
அந்தரங்கம் தொங்கிடும்.
வந்திறங்கி மனதுள்..
தொந்தரவும் செய்திடும்.

மனித அவலங்கள்
சங்கிலித் தொடர்தான்.
சங்கடங்கள் வருவதும்
போவதும் நிகழ்வுதான்.

மாய வலைக்குள்
மனிதர்கள் நடமாட்டம்
மனம்விட்டுச் சிரிப்பாய்
மாலையே நீயும்.

ஆனாலும் நீயோ..
வரவேண்டும் தினமும்
காத்திருக்கும் மனங்களை
களிப்புற வைப்பதற்கு.

…சிவனேஸ்…

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=6968

புரியாத காதல்.

மனதைத் தளரவிட்டேன்.
மங்கை உன்னை
கண்ட பின்பு.

நினைவுகளை சோரவிட்டேன்.
நிலவே உன்னை
நேசித்த பின்பு.

கற்பனையை வளர்தெடுத்தேன்.
கன்னி உன்னை
கரம் பிடிப்பதற்கு.

உன்மனமும் மாறவில்லை.
ஏனென்றும் தெரியவில்லை.
எழுதிடவும் ஒன்றுமில்லை.

இதுதான் காதலென்றால்
உன்மனமும் கல்லா…?
எனக்கொன்றும் புரியவில்லை.

காதலைச் சொன்னதுவும்
நீதானே முதலில்
காயப்படுவது நானா…?

மாறுவாய் நீயென்று
மனமேனோ சொன்னதனால்
மாதங்கள் போயிற்று.

நாட்களும் தினமென்னை
நையாண்டி செய்கிறது.
காதல்வெறும் பொய்யென்று.

காதல் வடுக்களினால்
காயப்பட்ட மனம்
கண்ணீர் வடிக்கிறது.

காலம் பதில்சொல்லுமென்று
காத்திருந்து காத்திருந்து
இப்போ… ….

உறக்கத்தை தொலைத்துவிட்டேன்.
உன்னிடம் நான்
மோகம் கொண்டதனால்..

பசியையும் தொலைத்துவிட்டேன்.
பாவை உன்னை
மனம் தேடுவதால்.

பாவம் என்று
நீ நினைத்தால்
நம்காதல் வாழும்.

இனியவளே நீ சொல்லு
ஏனிந்த மௌனம்.
சம்மதம் ஆகுமா…?

…சிவனேஸ்…

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=6971

காதல் வேசம்.

வந்து வந்து போகிறாய்
ஏனோ என் மனதை
இன்னும் புரியாமல் இருக்கிறாய்.

வேடிக்கைதான் இக் காதல்
வேண்டாம் இது போதும்
நீயும் என்னை நினைப்பதை.

மறந்துவிடு என்று சொல்ல
மனமோ எனக்கு இல்லை.
புரிந்திருக்கும் இது உனக்கு

போதும் இந்த வேசம்
புரியாமல் நான் தவித்தது.
தெரியாதா இது உனக்கும்.

காதலென்றால் இது அல்ல
கருத்தொருமித்து பழகுவது
அதுதான் காதல் இன்றும்

பொழுதை நீ கழிப்பதற்கு
போட்ட வேசம் இதுவென்று
புரிந்துகொண்டேன் அது போதும்.

நிறுத்திவிடு இனி வேண்டாம்
நிலையற்ற காதல் இது
கழி மண்ணாய் கரையட்டும்.

…சிவனேஸ்…

 http://www.thamilworld.com/forum/index.php?showtopic=6973

ஓவியா.


ஓவியமாய் நீ
எனக்குள் இருந்து
உணர்வுகளை செதுக்குவதால்
உறங்காமல் தவிக்கிறது.
உண்மையான அன்பு.
உணரவேண்டும் நீயும்..
அலைமோதும் நினைவுகளோ..
ஆளவேண்டும் உன்னையும்
அப்போது தெரியும்
அன்புப் பிணைப்பென்றால்
அறுக்காத சங்கிலியென்று…!

…சிவனேஸ்…

மனமொத்த காதல்.


அவனும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்.
காதல் பிறந்தது.
கதைத்து மகிழ்ந்தனர்.

சாதி இவர்களை
தடுத்து நிறுத்தியது.
மதமும் அங்கு
மல்லுக் கட்டியது.

பாவம் அவர்கள்..
காதலும் பயந்தது.
கண்ணீர் வடித்து..
கதறி அழுதது.

ஊரவர் திரழ
உளறு வாய்களும்
ஊதித் தள்ளின.
வேண்டாம் இதுவென்று…!

ஆனால்.. இவர்களோ..
காதலை வளர்த்தனர்.
சாதியும் மதமும்..
உரமாய் போயின.

மனங்கள் இரண்டும்
மாறாமல் இருந்ததனால்..
மணவாழ்வில் இணைந்து
மகிழ்ச்சியாய் வாழ்ந்தனர்.

…சிவனேஸ்…

தீண்டாமை.

அரும்பான போது
ஆனந்தம் ஆனந்தம்.
மொட்டாகி நானும்
பூவாக வேண்டுமென்று…!

புதுக்கனவு எனக்குள்
புதுப்புது அர்த்தங்கள்.
புரியாமல் தவித்தேன்.
பூவாக வேண்டுமென்று…!

சேகரித்த நினைவுகளோ
சேர்ந்திருந்து தொல்லைதர..
சோராமல் தவித்திட்டேன.;
பூவாக வேண்டுமென்று…!

பொறுமை நானிழந்து
பூமியில் வாழ்வதுவும்..
பொய்யென்று எண்ணுகையில்
பூவாக நான் மலர்ந்தேன்.

இப்போது நினைக்கின்றேன்.
எனக்குள்ளே புலம்புகிறேன்.
ஏன்தான் பூத்தேனோ…?
அப்படியொரு வெறுப்பு.

மனித வர்க்கத்துக்குள்
எத்தனை முரண்பாடுகள்…!
நாகரீகமற்ற சிந்தனைகள்.
நாளும் தொடருவது…!

ஏற்றத் தாழ்வுகளால்
ஏற்படும் தொல்லைகளோ
ஏராளம் என்றுணர்ந்தும்
ஏனிந்த வேசங்கள்…?

பூக்களைப் பற்றியெல்லாம்
புதுப்புதுக் கவிதைகள்.
புனைந்து எழுதிடுவார்.
புதுப்புதுக் கவிஞர்கள்…

பாவம் அவர்களும்
மனதுள் பட்டதையெழுதுகிறார்.
பாராட்டுப் பெறுவதற்காயல்ல.
தீண்டாமை..
ஒழியவேண்டும் என்பதுக்காய்.

சிந்தனைகளைச் சேர்த்து
செதுக்கிய கவிதைகளை..
படித்தபின்பு சொல்லிடுவார்..
சிறப்பாக இருக்குதென்று.

சிந்தித்தால் தீருமல்லவா…?
தீண்டாமை ஒழியுமல்லவா…?
திருப்பங்கள் ஏற்பட்டு
சமுதாயம்..
புதுப்பொலிவு காணுமல்லவா…?

…சிவனேஸ்…

அகதிகள்.

பிறந்த மண்ணில் அவலங்கள்
அகதிகளாய் அவர்கள் அங்கு..
போகும் இடம் தெரியாமல்
புளுவாய் தினம் துடிக்கின்றார்..!

சொத்துக்கள் பல இழந்து
சுகங்களையும் இவை தொலைத்து
நிம்மதி இன்றி வாழ்வில்..
நிர்க்கதியாய் நிற்கின்றார் இன்று..!

பச்சைப் புல் வெளியும்
பனை வடலி தென்னையும்
பலன் தரும் மரங்களும்
பாழாய்ப் போய் கிடக்குதங்கே..

திருத்தலங்கள் பலவும் அங்கு
செயலிழந்து போய் கிடக்கு
திருத்த முடியாமல்… மீண்டும்
செல் வந்து தாக்குமென்று

சொந்த நாட்டில் ஒதுக்குப்புறம்..
பார்த்திவர்கள் போய் இருந்தாலும்
சொந்தமில்லை இது என்று..
அங்கு துரத்தி விரட்டுகின்றார்..!

போதும் இது போதும்
பொல்லாத காலம் இதுவென்று
புளுங்கி மனம் நொந்து
போய் இருந்து அழுகின்றார்.

அழும் குரல்கள் கேட்குமா…?
அரக்க மனம் படைத்தோர்க்கு
ஆண்டவனே பதில் சொல்லு…?
அகதிகளா இவர்கள் அங்கு…?

…சிவனேஸ்…

« Older entries Newer entries »