ஒற்யையடிப் பாதையிலே
ஒருநாள் சந்தித்தோம்.
மறுமுறை சந்திக்க
விடுமுறையை தேடினேன்.
சிரித்தாய் உனக்குள்
கதைத்தேன் எனக்குள்.
மாதங்கள் ஓடின
மலருன்னை தேடின.
மறுபடியும் எப்போ
சந்தர்ப்பம் கிடைக்கும்
மயிலே உன்னோடு
மனம்விட்டு பழகிட..
வாடியது மனம்
தேடியது உன்னை
தேடாமல் வந்தாய்
தேவதை ஒருநாள்.
குவிந்தது சந்தோசம்
கூவியது மனது.
கேட்டதோ உனக்கும்
காதலையும் சொன்னாய்
ஈழத் தீவில்
எனக்காகாய் பூத்து
எத்தனை இன்பம்
எனக்குள் தந்தாய்.
கொஞ்சிப் பழகி
கெஞ்சித் திரிந்து
மிஞ்சும் வாலிப
சுகங்களை கண்டோம்.
பேராதனையில்….
நுழைவு கிடைக்க
காதலை வளர்க்க
கூடமும் அமைத்தோம்.
கொழும்பு நகரில்
சுற்றித் திரிந்து
பசுமை நினைவுகள்
பகிர்ந்தும் உண்டோம்.
காலித் திடலும்
மாலைப் பொழுதும்
மனதை கவர்ந்து
மங்கை மகிழ..
எட்டுத் திசையும்
என்னவள் முகமாய்
பட்டுத் தெறித்து
பலகதை சொல்ல..
நெஞ்சக் கூட்டில்
நினைவுகள் தாங்கி
விடியும் வரைக்கும்
கற்பனை சேர்க்க..
பொழுதும் விடிய
போய்விடும் நினைவை
கட்டி இழுத்து
எனக்குள் பூட்ட..
விடுவிடு என்றாய்
படபட என்று
பயந்த முகத்தை
பார்த்துச் சிரித்தேன்.
கடுகடுப்புடனே ….
காதில் சொன்னாய்
காதலைப் பற்றி
கொஞ்சும் தமிழில்..
புரிந்தது உனக்கு
புரியாமல் இருந்தது
புதிராக இருந்தது
எனக்குள் வெட்கம்.
போகட்டும் என்று
புறந்தள்ளி விட்டு
பூவே உன்னை
புரட்டிப் பார்க்க..
பொழுதும் விடிய
நினைவுகள் நகர..
கண்களும் சிவந்து
விழித்துக் கொள்ள..
காதலைப் பற்றி..
காதில் சொன்னது.
உண்மை என்று…
உள்ளமும் சொன்னது.
சிரிப்பும் வந்தது.
சிந்தனை சுழன்றது.
என்மனக் கட்டளை
உனக்கும் சொல்ல..
சொன்னேன் ஒருநாள்
சிரித்தாள் பலமுறை
இதுதான் காதல்
இப்படித்தான் இருக்குமென்று.
ஏக்கங்கள் தாக்கின
இரவுகள் நீண்டன..
ஏனோ எனக்குள்
புரியாத போராட்டம்.
இப்படி இருக்க..
ஒருநாள் சொன்னாள்.
தேவதை சொன்னது.
தேனாக இருந்தது.
காதலை வளர்த்தது
இனியும் போதும்.
கற்பனை வானில்
பறந்ததும் போதும்.
சேர்ந்து வாழ்வோம்
இருவரும் ஒன்றாய்
எமக்குள் இனியும்
இடைவெளி வேண்டாம்.
சொன்னதும் எனக்குள்
சுகமாக இருந்தது.
காதலில் வெற்றி
கண்ட மகிழ்ச்சி.
——————–
வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும்
நினைவுகள் …..
என்றும் சுகமானவை..
..நட்புடன் சிவனேஸ்..