மலராத காதல்.

அன்பே…..!
மௌனம் கலைவதெப்போ…..?
மன்னன் மனம் மகிழ்வதற்கு.
சோகம் கலைவதெப்போ…….?
நீ…… என்
சொந்தக்குயில் ஆவதற்கு.

நமக்குள்ளே ஓருறவு
துளிர்விட்டு பல்லாண்டு…
இவ்வுறவை வெளிப்படுத்த…
யார்முதலில் என்பதுதான்
நமக்குள்ளும்   ஒரு போட்டி..

நல்மனங்கள் பயப்படும்தான்….!
நாமறிந்த காதலிது.
ஆனாலும்….
நினைவுகளை சுமந்துள்ளம்
எத்தனைநாள் வாடுவது.
சொல் கண்ணே…….?

உன்காந்த விழிபட்டு
கவர்ந்திட்ட….
என் இதயம்
களிப்படைந்து துள்ளியதை
எப்படி நான் எடுத்துரைக்க…

நினைவுகளால் உனைவடித்து
நெஞசிற்குள் மறைத்துவைத்து
நான் காணும் கனவுகள்
நனவாகும் நாள் வருமா…..?

காலம் நம்முறவை
கண்டு கரைசேர்க்குமென..
காத்திருந்தால்
நெஞ்சில் விழுந்திடுமோ
திரை என்று
கொள்ளுது மனம் பீதி..

காதல் பதியம்வைத்து
காத்திருந்த இதயம்
கலங்குவது கண்டு
உதிராதோ உன் உதட்டால்
ஒரு வார்த்தை
நம்முறவு நிஜமென்று.

…சிவனேஸ்…

www.thamilworld.com/forum/index.php?showtopic=1931