வானத்துப்பெண்ணே.


வானத்து பெண் மயிலே
வாசமுள்ள பூங்காற்றே…!

வாடகைக்கு குடியிருக்கும்
வாலிபத்தின் அகல்விளக்கே.

பாசமுள்ள உன்னை
நேசமுடன் அங்கு

வான்வெளியில் வீடமைத்து
வாழவுன்னை சொன்னது யார்…? .

…சிவனேஸ்…

ஓவியா.


ஓவியமாய் நீ
எனக்குள் இருந்து
உணர்வுகளை செதுக்குவதால்
உறங்காமல் தவிக்கிறது.
உண்மையான அன்பு.
உணரவேண்டும் நீயும்..
அலைமோதும் நினைவுகளோ..
ஆளவேண்டும் உன்னையும்
அப்போது தெரியும்
அன்புப் பிணைப்பென்றால்
அறுக்காத சங்கிலியென்று…!

…சிவனேஸ்…