வரதட்சணை.

கண்ணே  மணியே  என்று..
கனிமொழி  பேசி   காதலிப்பார்.
திருமணம் என்றால்   சீதனம்  கேட்கிறார்.
 

பட்டினிச் சாவு…!

நினைக்கையிலே   மனம்    கனக்கிறது.
நேற்றிருந்த     வாழ்வும்    அங்கு
இன்று     பட்டினிச்    சாவும்.

…சிவனேஸ்…

காதலின் ஆட்சி..!

சொர்க்கத்தில்    திருமணங்கள்
நிச்சயிக்கப்   பட்டாலும்
காதலின்     ஆட்சிதான்     அங்கும்.

…சிவனேஸ்…