வேண்டும் ஒரு வரம்…!

ஓ…. இளமையே…!
நீ என்னிடமிருந்து
விடை  பெறாதிருக்க
வேண்டுகிறேன் ஒரு வரம்…!

ஏனெனில்……..
நீ என்னுடன்
இருக்கும் போதுதான்
எனது இளமையின்
கனவுகள் நிறைவேறும்.

நீ பிரிந்துவிட்டால்..
நிராசைகளானவற்றை
நினைத்துப் பார்த்து
மீண்டுமொரு வசந்தம்
வந்தென்னுள் வீசுமென்று..
தப்பாக கணக்கிட்டு..
மகிழவும்.. நான்
தயாராக இல்லை.

முதுமை வந்துவிட்டால்
எனக்கும் உனக்குமிடையில்
முட்கம்பி வேலியமைத்து
எல்லை போடும்.
பின்பு…
உன்னை எனக்குள்
எட்டிநின்று பார்க்கவும்
இடமளிக்காது.

ஆகையினால்….
இறந்த காலங்களை
எண்ணி மனம்
கவலை கொள்வதைவிட..
எதிர்காலத்தைப் பற்றி
நினைத்து மகிழ்வதேமேல்.

இப்படி மனம்
நினைப்ப தனால்தான்
வேண்டுகிறேன் ஒரு வரம்
இளமையே நீ
என்னிடமிருந்து விடைபெறாதே….!

…சிவனேஸ்…

www.thamilworld.com/forum/index.php?showtopic=2443