மௌனமாய் அழும் மல்லிகையே
உன்மனதை பறித்தது யார்…?
வாசம் அறியாத வண்டு..
மனவானை சுற்றி பறந்ததனாலா…?
முகம் அறியாமல் உன்னோடு
பழகிய சில நாட்களில்..
புரிந்ததனால் உன் சோகம்
தவிக்கிறது மனமோ தினமும்.
கோடையில் மழை தூறுமென்கிறாய்
மாரியில் வெயிலென்று வேதனைப்படுகிறாய்.
வெளியில் சொல்ல வெட்கப்படுகிறாய்..
வேதனைகளை உனக்குள்ளே சுமக்கின்றாய்.
ஏக்கங்கள் தந்த தாக்கங்களினால்
சேர்ந்தது உனக்குள் சோகங்களா…?
சொல்ல முடியாமல் தவிப்பது ஏன்…?
வர்ணிக்க முடியாமல் வாடுவது ஏன்…?
வாய் விட்டு அழத்தோன்றியும்
உனக்குள்ளே சமாதானம் செய்து..
அமைதிப்படுத்தியும் முடியாமல் நீ..
முகவரியை தினம் தேடுகிறாய்.
முடிந்துபோன கதைகளை எண்ணி
மனம் நொந்து தேய்கிறாய்.
இன்று நீ தேய்பிறையானால்…
நாளை நீ வளர்பிறையல்லவா.
வாடாத மலர் நீ
வசந்தம் உன்னை தாலாட்டும்
மகிழ்ந்து மனம் மகிழும்
மலரே கலைத்துவிடு மௌனத்தை.
——————–
வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும்
நினைவுகள் …..
என்றும் சுகமானவை..
..நட்புடன் சிவனேஸ்..