
அவனும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்.
காதல் பிறந்தது.
கதைத்து மகிழ்ந்தனர்.
சாதி இவர்களை
தடுத்து நிறுத்தியது.
மதமும் அங்கு
மல்லுக் கட்டியது.
பாவம் அவர்கள்..
காதலும் பயந்தது.
கண்ணீர் வடித்து..
கதறி அழுதது.
ஊரவர் திரழ
உளறு வாய்களும்
ஊதித் தள்ளின.
வேண்டாம் இதுவென்று…!
ஆனால்.. இவர்களோ..
காதலை வளர்த்தனர்.
சாதியும் மதமும்..
உரமாய் போயின.
மனங்கள் இரண்டும்
மாறாமல் இருந்ததனால்..
மணவாழ்வில் இணைந்து
மகிழ்ச்சியாய் வாழ்ந்தனர்.
…சிவனேஸ்…