பேச மறுத்த இதயம்.

கேட்காமல் தந்தாய்..
மறுக்காமல் ஏற்றேன்.

மறுபடியும் மௌனம்
மனதை குழப்புமா…?

காதல் என்பது
முன்றெழுத்து மந்திரமா…?

மூடி மறைத்து
இதயங்கள் தவிக்க…?

குழப்பமா உனக்குள்
கோபமா என்னோடு…?

வார்த்தைகளால் என்னை
வசமாக்கினாய் உனக்குள்.

நம்பினேன் நாளும்
தேங்கியது நினைவுகள்.

தேங்கிய நினைவுகளை
சேர்ந்தே சுவைத்தோம்.

அன்பை வளர்த்தோம்.
ஆனந்தம் அடைந்தோம்.

ஆசைகளை சேர்த்து
காதலுக்கு இறைத்தோம்.

என்ன சுகங்கள்
எத்தனை எதிர்பார்ப்பு.

இப்படியே இருக்க
எவ்வளவு போராட்டம்…!

இறைவனிடமும் கேட்டோம்
இணையவேண்டும் நாமென்று.

இத்தனையும் நொடிப்பொழுதில்
இடிந்துபோனது ஏன்…?

மௌனமாய் ஏனானாய்
மங்கையே சொல்லிவிடு..

பேசமறுக்கும் இதயத்தை
புரிந்திடவும் முடியவில்லை.

போவென்று சொன்னாலும்
பொய்யுரைக்க முடியவில்லை.

நல்ல மனங்களுக்கு
நாளும் தொல்லைதான்.

நீயன்று சொன்னது
பொருந்துதுபார் எனக்கு..

பொருந்தாத உள்ளங்கள்
புரியாது காதலை

இருந்தாலும் உன்னை
இன்றுவரை நேசிக்கிறேன்.

சிவனேஸ்…

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=7529

Follow

Get every new post delivered to your Inbox.