எனக்காக நீ மலர்ந்தாயென்று
எனக்குள்ளே எத்தனை ஆனந்தம்..
நெஞ்சுக்குள் நீ இருந்து..
நினைவுகளை மீட்பதனால்..
துள்ளல் இசை பாடி
மனம் தினமும் மகிழ்கிறது..!
ஆனால்…
உனது உள்ளம் மட்டும்..
ஊமையாய் இருப்பதனால்
காலத்தின் கட்டாயத்தால்
என் காதலும்
காலாவதி ஆகிடுமோ..
என்றெண்ணி … எனக்குள்ளே..
காதல் குறியிட்டு
காதல் கணக்கொன்றை
வகுத்துப் பார்த்தும்.. விடையாக..
உன்பெயர்தான் வந்ததுவும்..
ஏன் கண்ணே…..?
…சிவனேஸ்…