நெஞ்சுக்குள் நீ…!

எனக்காக நீ மலர்ந்தாயென்று
எனக்குள்ளே எத்தனை ஆனந்தம்..
நெஞ்சுக்குள் நீ இருந்து..
நினைவுகளை மீட்பதனால்..
துள்ளல் இசை பாடி
மனம் தினமும் மகிழ்கிறது..!

ஆனால்…
உனது உள்ளம் மட்டும்..
ஊமையாய் இருப்பதனால்
காலத்தின் கட்டாயத்தால்
என் காதலும்
காலாவதி ஆகிடுமோ..
என்றெண்ணி … எனக்குள்ளே..
காதல் குறியிட்டு
காதல் கணக்கொன்றை
வகுத்துப் பார்த்தும்.. விடையாக..
உன்பெயர்தான் வந்ததுவும்..
ஏன் கண்ணே…..?

…சிவனேஸ்…

Follow

Get every new post delivered to your Inbox.