நீலவான ஓடையிலே
நீந்தி வரும் வெண்ணிலவாய்
பூவே உன்முகம் கண்டு
மனம் தொலைத்தேன்.
மனம் தொலைத்த
நாள்முதலாய்
தேடி நான் ஓடி _ உன்
முகவரியை தேடுகிறேன்
தொலைதூரப்பூவென்று..
சொன்னாலும்…
என் மனது
அடம்பிடித்து தினம் அழுது
நீவேண்டும் தனக்கென்று
மவெழுதி குவிக்கிறது.
தவிப்பறிந்து நீயுணர்ந்தால்
தந்துவிடு இதயத்தை
கன்னித் தீவினிலே_ நாம்
காதலித்து மணமுடிப்போம்.
…சிவனேஸ்….