தூது போ தென்றலே …!

உன்நினைவுகள் என்னை..
வாட்டுவதால்
நிழற்படமாய் நீ தோன்றினாலும்
என் காதலை ஏற்றுக்கொள்வாயா….?
எனும் தவிப்பினால்
நெஞ்சகத்துள் ஒரு படபடப்பு.

துணிச்சலற்ற காதல்
துடுப் பிழந்த படகைப்போல்
தண்ணீரில் தள்ளாடும்.
தானாக கரை சேருமா….?

துணிவு வேண்டும் இதற்கும்
மனச் சாட்சி சொல்கிறது.
இல்லையென்றால்….
மணவாழ்வு உமக்கு
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது
நன்றென்று.

ஆனாலும்……………
துள்ளும் இளமையினால்
இதயத்துள்..
துளிர் விட்ட காதல்
மலரே உன்னை
மனச்சிறையிலடைத்து
மகிழ்ந்து கொள்கிறதே
என் காதலை
யாரிடத்தில் தூதனுப்ப ….?

தென்றலிடம் சொல்லுகிறேன்.
வந்து சொன்னால்
பதில் அனுப்பு
அதுவரைக்கும் காத்திருப்பேன்….!

…சிவனேஸ்…
www.thamilworld.com/forum/index.php?showtopic=77