துன்பத்திலும் இன்பம்…!

கருமுகில்கள் வானத்தை கௌவ்வி
களி நடனம் செய்யும்.
வான்மகளோ கண்டு அங்கு..
கண்ணீர் சிந்தி அழுவாள்…!

பொங்கி எழும் நெஞ்சு…
பொறுக்க முடியாமல் தவித்து…
சத்தமின்றி யுத்தம் செய்து…
பூமித்தாயும் மனம் நோகும்.

ஆனாலும் வேடிக்கை இது…
வான்மகளின் கண்ணீர் துளிகள்
மழை துளிகளாய் மாறி
பூமியை வந்து சேர…

நாவறண்டு போன நாணல்களோ…
திருப்திகண்டு ஆடி மகிழும்.
துன்பத்திலும் இன்பம் இங்கு
இயற்கைக்கும் இது பொருந்துதுபார்…!

——————–

வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும்
நினைவுகள் …..
என்றும் சுகமானவை..


..நட்புடன் சிவனேஸ்..

Follow

Get every new post delivered to your Inbox.