நினைத்துப் பார்த்தால்
சகிக்க முடியாது.
மௌனம் அழுதுவிடும்
மறக்கவும் முடியாது.
சுமைகளே வாழ்க்கையாகும்.
சொந்தங்களும் துரத்திவிடும்.
சோகம்தான் வாழ்க்கையென்று
சுகங்களும் சொல்லிவிடும்.
எண்ணிப் பார்ப்பவர்க்கு
உன் மீது ..
இரக்கம் ஊற்றெடுத்து.
ஆறாய் ஓடி வரும்.
மனச்சாட்சி உன்னை
மறுபடியும் வதை செய்யும்.
திருந்தி நீ வாழ
சிந்தனைகள் சிறகடிக்கும்.
முந்தி விட்ட பிழைகளை
பிந்தி வந்த செய்திகள்..
பந்திகளாய் பக்குவமாக்க..
தென்றலுன்னை தாலாட்டும்.
ஏமாறாமல் இனி இருந்து..
மனிதனாய் நீ வாழ்ந்தால்..
மறுபடியும் வசந்தம் வாழ்வில்..
வந்துன்னை தாலாட்டும்.
….சிவனேஸ்….
