காதல் வேசம்.

வந்து வந்து போகிறாய்
ஏனோ என் மனதை
இன்னும் புரியாமல் இருக்கிறாய்.

வேடிக்கைதான் இக் காதல்
வேண்டாம் இது போதும்
நீயும் என்னை நினைப்பதை.

மறந்துவிடு என்று சொல்ல
மனமோ எனக்கு இல்லை.
புரிந்திருக்கும் இது உனக்கு

போதும் இந்த வேசம்
புரியாமல் நான் தவித்தது.
தெரியாதா இது உனக்கும்.

காதலென்றால் இது அல்ல
கருத்தொருமித்து பழகுவது
அதுதான் காதல் இன்றும்

பொழுதை நீ கழிப்பதற்கு
போட்ட வேசம் இதுவென்று
புரிந்துகொண்டேன் அது போதும்.

நிறுத்திவிடு இனி வேண்டாம்
நிலையற்ற காதல் இது
கழி மண்ணாய் கரையட்டும்.

…சிவனேஸ்…

 http://www.thamilworld.com/forum/index.php?showtopic=6973