காதல் வளர்ப்போம்.

இளமை எட்டிப்பார்த்ததனால்
மனம் தட்டிப்பார்த்தது
உன் இதயத்தை.

கட்டிப்போட்ட என் ஆசைகளை..
கட்டவிழ்த்துப் பார்த்து
கவிதை பாடச்சொன்னது
உன் இளமை.

இளமையின் எதிர்பார்ப்பால்..
நமக்குள் ஏற்பட்டது காதல்.

காதல் அறுவடைக்காய்
காத்திருக்கும் காதலர்களுள்
நாமும் காதலர்களாய்..
காத்திருந்து காதல் வளர்ப்போம்.

…சிவனேஸ்…