
இளமை எட்டிப்பார்த்ததனால்
மனம் தட்டிப்பார்த்தது
உன் இதயத்தை.
கட்டிப்போட்ட என் ஆசைகளை..
கட்டவிழ்த்துப் பார்த்து
கவிதை பாடச்சொன்னது
உன் இளமை.
இளமையின் எதிர்பார்ப்பால்..
நமக்குள் ஏற்பட்டது காதல்.
காதல் அறுவடைக்காய்
காத்திருக்கும் காதலர்களுள்
நாமும் காதலர்களாய்..
காத்திருந்து காதல் வளர்ப்போம்.
…சிவனேஸ்…