காதல் வந்ததனால்
கவிதை எழுதினேன்….நீ
கனவுகளில் வந்ததனால்
கடிதம் எழுதினேன்.
எது எழுதியனுப்பினால் அன்பே
இதற்கு பதிலெழுதுவாய்…?
புரியாமல் காத்திருக்கிறேன்
மனந்தொட்டு மகிழ்வுடன்….நீ
மடலொன்று வரைந்திடவே…மனம்
தினந்தோறிங்கு தவித்திருக்கு.
இக்காதலை நீ எற்பாயா….?
இல்லை நானுன்னை…
கனவுகளில் மட்டும்தான் காதலிப்பதா….?