
கருமுகில் கூட்டங்கள்
வானத்தை கௌவ்வி-அங்கு
அராஜகங்கள் செய்ய..
வைகறைப்பொழுதோ புலராமல்
தவித்து தனித்திருக்க..
பூமித்தாயும் அங்கு
அழுது கண்ணீர்வடிக்க..
பொறுக்காத கதிரவன்
வீரம் கொண்டு…
இடறறுத்து புறந்தள்ளி
வானத்தில் வந்துதிக்க
மகிழ்ச்சி பொங்கி- அங்கு
மக்களும் ஆடினர்..
ஆனந்தக்கூத்து.
…சிவனேஸ்…