கலியாணச் சந்தையிலே
வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு
முன்னுரிமை அளித்து.
கைநிறைய சீதனமும்
கல் வீட்டோடு காணியும்
கொடுக்கின்ற…
எம்மவர்கள் மனங்களில்தான்
எத்தகைய இலட்சணங்கள்.
சம்பந்தம் சரிவந்தால்;..
சம்பந்திமாருக்கும் சந்தோசம்.
அவன்;
அந்நியதேசத்தின் அழுக்குகளை..
தினமும்;..
கை ஓயாமல் கழுவினாலும்..
இவர்களுக்கு ஆட்சேபனையில்லை…!
ஆனால்….ஒருவன்
தன்தேசத்து அழுக்குகளை..
கழுவும்போது மட்டும்
இவர்கள்..
வர்க்கத்துக்குள் வகைபிரித்து
வேடிக்கை பார்ப்பதுதான்
விந்தையாக இருக்கிறது.
…சிவனேஸ்…
(ஈழமுரசு வாரமலர் பாரிஸ்_18.12.1992)