எனக்காக…!

ஆகாய கங்கையில்
நீராடும் மங்கையே..
நினைவுகளை இங்கு
ஏன் விட்டுச் சென்றாய்…?

எட்டாத பழம் என்று
எட்டி எட்டி நின்றபோதும்
ஒட்டி ஒட்டி வந்து
உறவொன்றை வளர்த்தவளே…

புரியாத நிலவொளியே..
புதிர் போடும் புன்னகையே
எதிர் வீட்டு யன்னலிலே
எனக்காக பூத்தவளே..

திரும்பும் திசைகளெல்லாம்
தெரிகிறது உன் முகம்
கண்களால் சிரிக்கின்றாய்
கவிதைகளாய் மலர்கின்றாய்.

ஏக்கங்களை சுமக்கின்றேன்
எனக்குள்ளே தவிக்கின்றேன்.
எதற்காகத் தெரியுமா…?
நீ.. எனக்காக என்பதற்காய்.

…சிவனேஸ்…
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=7096