
தலைவிரித்து ஆடுது.
பாலகர் வயிறோ
பாலுக்கு அழுகுது.முன்னைய வாழ்வு
கண்ணுக்குள் தெரியுது.
முடிந்து போனதாவென்று
மனமோ ஏங்குது…!
சாவிலும் வாழ்ந்து
சந்தித்த அனுபவம்.
சங்கடங்கள் வந்தும்
சமாதானம் செய்யுது.
வாழ்ந்தது போதுமென்று.
செத்திட தோன்றினும்- மனம்
பொன்னான உயிரை
மாய்த்திட மறுக்குது.
தென்னோலை தோரணங்கள்
அவ்வப்போ பார்த்தது.
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
மங்கள வீடுகளில்..
கண் விழித்தபோதிப்போ
கண்ணுக்குத் தெரியுது.
குருத்தோலை தோரணமும்
மரண அழுகையும்.
ஆனாலும்….. எப்போ….
விடியுமென்ற ஏக்கம்.
விடிந்துவிட்டால் அழும்பிள்ளை
புட்டிப்பாலுக்கென்ற தவிப்பு.
சோதனைமேல் வேதனை..
அழ வேரூன்றியிருக்கிறது.
அழுவதற்கா பிறந்தார்கள்
அனாதைகளா இவர்கள்…?
பூமிப் பந்திலும்
நடக்குது சதிராட்டம்
பொறுத்திருந்து பார்ப்போம்
புலம்புது இவ்வுள்ளங்கள்.
——————–
விழியோரம் தேங்கும்
நினைவுகள் …..
என்றும் சுகமானவை..
..நட்புடன் சிவனேஸ்..