இதுதான் உலகம்…!

கண்ணே மணியே என்பார்.
தேனே திரவியமே
தெவிட்டாத   தெள்ளமுதே
நீயின்றி என்வாழ்வு
கானல் நீராகிவடும்
கனியமுதே என்காதலை
ஏற்றுக்கொள்வாயா….?

என்றெல்லாம் கூறி
தன் வாலிபப் பசிக்கு
இரைதேடத் துடித்திடுவார்.

காலம் கைகொடுத்தால்
மண மேடையில்
உனை இருத்தி
அருந்ததி பார்த்து
அக்கினி சாட்சியுடன்
மாலையிட்டு மனைவியாக்கி
மகிழ்ந்தும் கொள்வார்.

ஆனால்..
சொன்னபடி சீதனம்
வந்து சேராவிட்டால்
உன்னை சினக்கவும்
தயங்கார் பெண்ணே….!
இதுதான் உலகம்.

…சிவனேஸ்…

Follow

Get every new post delivered to your Inbox.