நினைவுக்குள் வந்தாய்.
நிலவென்று அழைத்தேன்.
கண்ணுக்குள் வந்தாய்
காதலியென்று அழைத்தேன்.
மனதுக்குள் வந்துவிட்டாய்…!
எப்படி நானழைக்க…?
ஆசைதான் சொல்ல..
ஆனாலும் தயக்கம்.
பூவுக்குத் தெரியாதா…?
புதிர்போட்டுச் சொல்லுவது..?
பூவும் எனக்குத்தான்
புன்னகையும் எனக்குத்தான்.
புரிந்திருக்கும் உனக்கு
அதுபோதும் எனக்கு.
…சிவனேஸ்…