ஆசை…!

நினைவுக்குள்     வந்தாய்.
நிலவென்று    அழைத்தேன்.

கண்ணுக்குள்    வந்தாய்
காதலியென்று    அழைத்தேன்.

மனதுக்குள்      வந்துவிட்டாய்…!
எப்படி     நானழைக்க…?

ஆசைதான்    சொல்ல..
ஆனாலும்    தயக்கம்.

பூவுக்குத்      தெரியாதா…?
புதிர்போட்டுச்    சொல்லுவது..?

பூவும்   எனக்குத்தான்
புன்னகையும்    எனக்குத்தான்.

புரிந்திருக்கும்    உனக்கு 
அதுபோதும்    எனக்கு.

…சிவனேஸ்…