அழுவதால் ஆறாது…!


சோகம் தோய்ந்த முகவரியை
தேடிச் சென்று அலைகிறாய்
நாடி உன்னை வந்தாலும்..
ஒடிச்சென்று நீ ஒதுங்குகிறாய்.

மனமே உன்னை மாற்றிக்கொள்
மறுபடியும் ஏன் கலக்கம்…?
மௌனமாய் நீ அழுதால்
ஆறாது இந்த வடு…

ஆளும் தினம் உன்னை
அழுவாய் நாள் தோறும்
ஆறுதல் யாரும் இல்லை
அழுவதற்கா நீ பிறந்தாய்

கேட்ட வரம் கிடைக்கவில்லை
துரதிர்ஸ்டம் இது என்றால்
அழுது என்ன பயன்
ஆரறிவார் உன் நிலையை..

பார்ப்பவர் பலர் சிரிப்பார்.
பார்த்து மேலும் தேய்வாய்
சேர்த்த சுகம் போகும்
சேர்ந்து மனமும் தவிக்கும்.

எடுத்துச் சொன்ன சிலவார்த்தை
ஏற்படுத்தியதா உனக்குள் மாற்றம்…?
மாற்றம் இன்னும் இல்லையென்றால்
மாற்ற இனி முயற்சிசெய்..

…சிவனேஸ்…

Follow

Get every new post delivered to your Inbox.