
பிறந்த மண்ணில் அவலங்கள்
அகதிகளாய் அவர்கள் அங்கு..
போகும் இடம் தெரியாமல்
புளுவாய் தினம் துடிக்கின்றார்..!
சொத்துக்கள் பல இழந்து
சுகங்களையும் இவை தொலைத்து
நிம்மதி இன்றி வாழ்வில்..
நிர்க்கதியாய் நிற்கின்றார் இன்று..!
பச்சைப் புல் வெளியும்
பனை வடலி தென்னையும்
பலன் தரும் மரங்களும்
பாழாய்ப் போய் கிடக்குதங்கே..
திருத்தலங்கள் பலவும் அங்கு
செயலிழந்து போய் கிடக்கு
திருத்த முடியாமல்… மீண்டும்
செல் வந்து தாக்குமென்று
சொந்த நாட்டில் ஒதுக்குப்புறம்..
பார்த்திவர்கள் போய் இருந்தாலும்
சொந்தமில்லை இது என்று..
அங்கு துரத்தி விரட்டுகின்றார்..!
போதும் இது போதும்
பொல்லாத காலம் இதுவென்று
புளுங்கி மனம் நொந்து
போய் இருந்து அழுகின்றார்.
அழும் குரல்கள் கேட்குமா…?
அரக்க மனம் படைத்தோர்க்கு
ஆண்டவனே பதில் சொல்லு…?
அகதிகளா இவர்கள் அங்கு…?
…சிவனேஸ்…