நினைவில் தவம்…!

கவிதை ஒன்று நானெழுத
தலைப்பு ஒன்று அனுப்பிவைத்தாய்.
உனக்குள் வந்து போவதெல்லாம்
எனக்குள் வருமா கவிதைகளாய்…?

வாடாமல் மனது இருந்திருந்தால்
பூவாக மலர்ந்திருக்கும் புதுக்கவிதை..!
பார்த்து நீயும் ரசித்திருப்பாய்.
அசத்தலாயும் அது இருந்திருக்கும்.

தேய்ந்து மனம் தேய்பிறையாக
ஒடிந்து உள்ளம் இருக்கையிலே
ஒரு கவிதை எழுது என்று
சொல்லலாமோ சொல் கண்ணே.

சொன்னதனால் இதை கிறுக்குகிறேன்.
சுவை இருந்தால் பருகிக்கொள்.
இல்லை என்றால் தூக்கியெறி
அதுவும் சுகமாகும் எனக்குள்ளே

பட்டுடுத்த மேனி என்பேன்..
பால் நிலவு தோற்றமென்பேன்
பூக்கள்கூட உனை கண்டால்
பொறாமை கொள்ளும் என்றிடுவேன்.

மென்மைச் சிரிப்பழகும்..
மேன்மைப் பேச்சழகும்..
பெற்றதனால் நீ எனக்கு
அழகிய தமிழும் ஆனாய்.

உன் கன்னக் குழிகழுக்குள்
கவிதைகளாய் பூத்திருக்க
கவிதை ஒன்று வேண்டுமென்று
கட்டளை ஏன் பிறப்பித்தாய்…

காரணமோ தெரியவில்லை இதை
யாரிடமும் கேட்கவில்லை…..
நவரசமாய் எனக்குள் நீ
நர்த்தனங்கள் தினம் செய்வதனால்.

முகமறியா புது மலரே
முன்பு என்னை கண்டாயா…?
முழு நிலவாய் எனக்குள்ளே
முகம் புதைத்து சிணுங்குவதேன்…

நினைவுகளில் வருவதனால்
நெருங்கிக் கொஞ்சம் கதைப்பதற்கு
நீண்ட நாள் யோசித்தேன்.
நிலவே உன்னை பார்ப்பதற்கு.

அழகு தமிழ் வார்த்தைகளை
அடுக்கடுக்காய் நான் கோர்த்து
வாய் உதிரும் புன்னகையால்
வான் உயர பாராட்ட

வானுயர நீ பறந்து
விண்மீனை நீயும் தொட்டு
நிலாவுக்கும் சொந்தம் என்று
என் நெஞ்சமதை குழப்பிவிட்டாய்

போதும் இது போதும்
புன்னகையால் எனை வாட்டியது
காணும் இனி காணும்
கனவுகளில் காதல் கொண்டதுவும்..

கீழ் வானம் சிவந்திருக்க
மேல் வானில் வந்திருந்து
வானத்து கன்னி நீ
விடியலுக்காய் காத்திருந்து
விடை பெற்று சென்றாயோ..
வான்மதியே என் வணக்கத்திற்குரியவளே…!

…சிவனேஸ்…

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=7521

பேச மறுத்த இதயம்.

கேட்காமல் தந்தாய்..
மறுக்காமல் ஏற்றேன்.

மறுபடியும் மௌனம்
மனதை குழப்புமா…?

காதல் என்பது
முன்றெழுத்து மந்திரமா…?

மூடி மறைத்து
இதயங்கள் தவிக்க…?

குழப்பமா உனக்குள்
கோபமா என்னோடு…?

வார்த்தைகளால் என்னை
வசமாக்கினாய் உனக்குள்.

நம்பினேன் நாளும்
தேங்கியது நினைவுகள்.

தேங்கிய நினைவுகளை
சேர்ந்தே சுவைத்தோம்.

அன்பை வளர்த்தோம்.
ஆனந்தம் அடைந்தோம்.

ஆசைகளை சேர்த்து
காதலுக்கு இறைத்தோம்.

என்ன சுகங்கள்
எத்தனை எதிர்பார்ப்பு.

இப்படியே இருக்க
எவ்வளவு போராட்டம்…!

இறைவனிடமும் கேட்டோம்
இணையவேண்டும் நாமென்று.

இத்தனையும் நொடிப்பொழுதில்
இடிந்துபோனது ஏன்…?

மௌனமாய் ஏனானாய்
மங்கையே சொல்லிவிடு..

பேசமறுக்கும் இதயத்தை
புரிந்திடவும் முடியவில்லை.

போவென்று சொன்னாலும்
பொய்யுரைக்க முடியவில்லை.

நல்ல மனங்களுக்கு
நாளும் தொல்லைதான்.

நீயன்று சொன்னது
பொருந்துதுபார் எனக்கு..

பொருந்தாத உள்ளங்கள்
புரியாது காதலை

இருந்தாலும் உன்னை
இன்றுவரை நேசிக்கிறேன்.

சிவனேஸ்…

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=7529