ஏப்ரல் 14, 2007 இல் 3:55 பிற்பகல் (புத்தாண்டே வருக...!)

சித்திரைப் புத்தாண்டே
நீ வருக.
திருப்பங்கள் கொண்டு
நீ வருக.
விருப்பங்கள் நிறைந்த
ஆண்டாய்..
விரும்பும் மனங்களுக்கு
விருந்து படைக்க
நீ வருக.
சாந்தியும் சமாதானமும்
தரணியெங்கும் நிறைந்திடவே
முத்திரை பதிக்குமாண்டாய்
நீ வருக.
பஞ்சமும் பட்டினியும்
அகன்று மக்கள்
மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடவே
சித்திரையாள் நீ வருக.
…சிவனேஸ்…
கருத்துத் தெரிவிக்கவும்
ஏப்ரல் 1, 2007 இல் 8:00 பிற்பகல் (கதிரவன்.)

கருமுகில் கூட்டங்கள்
வானத்தை கௌவ்வி-அங்கு
அராஜகங்கள் செய்ய..
வைகறைப்பொழுதோ புலராமல்
தவித்து தனித்திருக்க..
பூமித்தாயும் அங்கு
அழுது கண்ணீர்வடிக்க..
பொறுக்காத கதிரவன்
வீரம் கொண்டு…
இடறறுத்து புறந்தள்ளி
வானத்தில் வந்துதிக்க
மகிழ்ச்சி பொங்கி- அங்கு
மக்களும் ஆடினர்..
ஆனந்தக்கூத்து.
…சிவனேஸ்…
கருத்துத் தெரிவிக்கவும்
ஏப்ரல் 1, 2007 இல் 12:01 பிற்பகல் (உனக்காக...!)

எனக்காக பிறந்தவளே..
எதற்காக இந்த மௌனம்….?
காதலின் தவிப்பு தனை
காணுவதே இன்பமா உனக்கு…?
போதும் உன் மௌனம்
புரியாதா எனக்கு….?
இதயத்துள் நீ இருந்து
இம்சைகள் பல செய்கின்றாய்
ஏற்ற மனச் சுகத்தை
இறக்கி வைக்க மறுக்கிறது.
இன்னும் சுகம் தேவையென்று
சொக்கி மனம் நிற்கிறது.
பதியம் வைத்த நம்காதல்
பக்குவமாய் வளர்ந்திடவே
காத்திருந்து காத்திடுவோம்
வாழ்க நம் காதல்.
வளர்க நம் உறவு.
…சிவனேஸ்…
http://www.forum.vettimani.com/
1 மறுமொழி